நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.நேற்று வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நேசபிரபுவை, கார் மற்றும் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடந்து நோட்டம் விட்டுள்ளனர். மேலும், அவர் குறித்து அவரது உறவினர்களிடமே விசாரித்தும் சென்றுள்ளனர்.